U19 ஒருநாள் உலக கோப்பை: ஆயுஷ் மாத்ரே தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

உலக கோப்பை தொடருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யவன்ஷி செயல்படுவார்.
U19 ஒருநாள் உலக கோப்பை: ஆயுஷ் மாத்ரே தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
Published on

மும்பை:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை நடக்கவுள்ளது. இந்த தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறுகிறது.

இந்நிலையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்த தொடரில் வைபவ் சூர்யவன்ஷி கேப்டனாகவும் ஆரோன் ஜார்ஜ் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஏனெனில் ஆயுஷ் மாத்ரே மற்றும் விஹான் மல்ஹோத்ரா காயம் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தவறவிடுகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பெனோனியில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

U19 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:-

ஆயுஷ் மத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (துணை கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்எஸ் அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ படேல், மொஹமத் சிங் ஏனான், டிஹில், குமார், டெனில், ஹெனில்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com