வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லிட்டன் தாஸ்

நாட்டிலிருந்து எல்லாவிதமான வன்முறைகளையும் விலக்கி ஒன்றாக வாழுவோம் என நான் நம்புகிறேன்.ஏனென்றால் இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லிட்டன் தாஸ்
Published on

வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறைகள் காரணமாக அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. இக்கலவரத்தின் போது அந்நாட்டில் உள்ள பெரும்பாலான இடங்கள் தீக்கிரையாகின. அதிலும் குறிப்பாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸின் வீடும் எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் போராட்டத்தில் தனது வீடு எரிக்கப்பட்டதாக வெளியான வதந்தி தவறானது என்று லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

என் நாட்டு மக்களே, நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். சமீப நாள்களாக எனது வீடு எரிக்கப்படுவதாக செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இந்த செய்தி முற்றிலும் தவறானது. இந்த வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம். நானும் எனது குடும்பத்தினரும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளோம். வங்கதேசம் ஒரு வகுப்புவாத நாடு என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.

அதனால் நாம் அனைவரும் ஒன்றாக இருந்து இந்த நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். முழு நாட்டுடனும் எனது தினாஜ்பூர் மக்களுடனும், மற்றவர்களைக் காப்பாற்ற நீங்கள் எழுந்து நின்ற விதம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த நாட்டிலிருந்து எல்லாவிதமான வன்முறைகளையும் விலக்கி ஒன்றாக வாழுவோம் என நான் நம்புகிறேன். ஏனென்றால் இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது.

இவ்வாறு தாஸ் கூறினா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com