டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி ஆலோசகராகிறார் லசித் மலிங்கா

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது.இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி ஆலோசகராகிறார் லசித் மலிங்கா
Published on

கொழும்பு:

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.

இதையடுத்து, டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகின்றன. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

தசன் ஷனகா (கேப்டன்), பதும் நிசங்கா, கமில் மிஷ்ரா, குசால் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசால் பெரேரா, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, மஹேஷ் தீக்சனா, துஷ்மந்த சமீரா, மதீஷ பதிரன, ஈஷான் மலிங்கா.

இந்நிலையில், டி 20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி 8-ம் தேதி அயர்லாந்துடனும், 12-ம் தேதி ஓமனுடனும், 16-ம் தேதி ஆஸ்திரேலியாவுடனும், 19-ம் தேதி ஜிம்பாப்வே உடனும் மோதுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com