இந்திய அணியை வீழ்த்துவதற்கு ஆவலாக இருக்கிறோம்- கேஷவ் மகராஜ்

இந்த போட்டியை எங்களை மிகப்பெரிய அளவில் சோதித்துக் கொள்வதற்குரிய ஒன்றாக கருதுகிறோம். தென் ஆப்பிரிக்க அணியின் சுற்றுப்பயணங்களில் மிகவும் கடினமான தொடராக இது இருக்கும்.
இந்திய அணியை வீழ்த்துவதற்கு ஆவலாக இருக்கிறோம்- கேஷவ் மகராஜ்
Published on

கொல்கத்தா:

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் நேற்று அளித்த பேட்டியில், 'இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்ற உண்மையான வேட்கையும், ஆவலும் எங்கள் அணிக்குள் அதிகமாக இருக்கிறது.

அனேகமாக தென் ஆப்பிரிக்க அணியின் சுற்றுப்பயணங்களில் மிகவும் கடினமான தொடராக இது இருக்கும். இந்த போட்டியை எங்களை மிகப்பெரிய அளவில் சோதித்துக் கொள்வதற்குரிய ஒன்றாக கருதுகிறோம். எங்களது திறமையை நாங்களே தரப்படுத்திக் கொள்ளவும், நாங்கள் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்பதை பார்க்கவும் இது அருமையான வாய்ப்பு. இந்திய துணை கண்டத்தில் மற்ற பகுதிகளில் வெற்றி பெற தொடங்கி விட்டோம். இப்போது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களது அடுத்த இலக்கு.

கொல்கத்தா ஆடுகளம் பாகிஸ்தானில் இருந்தது போல் முழுமையாக சுழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்படும் என நினைக்கவில்லை. இந்தியாவின் பாரம்பரிய டெஸ்ட் ஆடுகளங்கள் போலவே இது இருக்கும் என எதிர்பார்க்கிறேன். அதாவது போக போக ஆடுகளத்தன்மை மாறும் போது சுழலுக்கு உதவும்' என்றார்.

தென் ஆப்பிரிக்க அணி இந்திய மண்ணில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்டில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com