பண்ட், ஷ்ரேயாஸ் இல்லை.. சம்பள உயர்வில் உச்சம் பெற்ற வீரர் இவர்தான்

ஏலத்தில் அதிகபட்ச தொகையாக பண்ட் ரூ. 27 கோடிக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் ரூ.26.75 கோடிக்கும் ஏலம் போனார்கள். ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 தொடங்கி மே 25 வரை நடக்கிறது.
பண்ட், ஷ்ரேயாஸ் இல்லை.. சம்பள உயர்வில் உச்சம் பெற்ற வீரர் இவர்தான்
Published on

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 தொடங்கி மே 25 வரை நடக்கிறது. இதற்கான மெகா ஏலம் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கும் அதனை தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் ரூ.26.75 கோடிக்கும் ஏலம் போனார்கள்.

என்னதான் அதிக தொகைக்கு ஏலம் போனாலும் கடந்த முறை வாங்கிய ஊதியத்தை வைத்து பார்க்கும் போது ஜித்தேஷ் சர்மா முதல் இடத்தில் உள்ளார். 

நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சுமார் 5500% சம்பள உய உயர்வு பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை ஜித்தேஷ் சர்மா படைத்துள்ளார். ஏலத்தில் ஜித்தேஷ் சர்மாவை பெங்களூரு அணி ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்தது. பண்ட்டும், ஸ்ரேயாஸூம் அதிக விலைக்கு ஏலம் போனாலும் கடந்த முறை வாங்கிய ஊதியத்தை ஒப்பிடுகையில் அவர்களின் சம்பள உயர்வு ஜித்தேஷ் சர்மாவை விட மிகக் குறைவு (ரூ.20 லட்சம்) ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com