டெஸ்ட் தொடரில் இருந்து பண்ட் விலகல்- இங்கிலாந்துக்கு பறக்கும் இஷான் கிஷன்

ரிஷப்பண்ட் 37 ரன்னில் இருக்கும் போது காயத்தால் வெளியேறினார்.ஸ்கேன் எடுக்கப்பட்டதில் ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் தொடரில் இருந்து பண்ட் விலகல்- இங்கிலாந்துக்கு பறக்கும் இஷான் கிஷன்
Published on

இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து இருந்தது.

ரிஷப்பண்ட் 37 ரன்னில் இருக்கும் போது காயத்தால் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பண்ட் விலகினார். இதனால் 2-வது இன்னிங்சில் ரிஷப் பண்ட் விளையாடமாட்டார். இது இந்திய அணிக்கு பின்னடைவாகும்.

ரிஷப் பண்டிற்கு பதிலாக இஷான் கிஷன் இந்திய அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com