

ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு கடும் கிராக்கி இருந்த நிலையில், எல்லா அணிகளிலும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் களத்தில் தடம் பதிக்க காத்திருக்கின்றனர். #IPL
11-வது ஐ.பி.எல் டி20 தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த வீரர்கள் ஏலத்தில் குல்தீப் யாதவ், சாஹல் ஆகிய ரிஸ்ட் ஸ்பின்னர்களை தங்கள் வசப்படுத்த அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. ரஷித்கான், சோதி, இம்ரான் தாஹீர்,பத்ரி ஆகிய ரிஸ்ட் ஸ்பின்னர்களும் நல்ல விலைக்கு ஏலம் போயினர்.
டி20 போட்டிகளை பொறுத்தவரை ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பார்கள். எல்லா அணிகளும் இவ்வகை ஸ்பின்னர்களை வைத்துள்ள நிலையில், அவர்கள் தங்களது திறமையை வெளிக்காட்ட ஐ.பி.எல் ஒரு வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது. #IPL