

வாக்கு எண்ணும் பணியை பார்வையிட வரும் தேர்தல் முகவர்கள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 1, 2 தேதிகளில் முழு ஊரடங்கா என்பது பற்றி தமிழக அரசே முடிவெடுக்கும்.
* வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளோம்.
* தேர்தல் வழிமுறைகளை பின்பற்றி மே 2ந்தேதி ஞாயிறன்று வாக்கு எண்ணிக்கை நடக்கும்.
* தொகுதி, அதிகாரிகளை பொறுத்து வாக்கு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கை மாறலாம்.
* 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியில்லை.
* கொரோனா நெகடிவ் சான்றிதழ், ஆர்டிபிசிஆர் சோதனை, தடுப்பூசி சான்று இருந்தாலும் முகவர்களின் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியில்லை.