நமக்கு எதுக்கு வம்பு.. இரு அணிக்கும் ஆதரவு.. வித்தியாசமான கெட்டப்பில் வந்த கிறிஸ் கெய்ல்

ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக கிறிஸ் கெய்ல் விளையாடியுள்ளார்.இரு அணிகளுக்கும் தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக வித்தியாசமான கெட்டப்பில் வந்துள்ளார்.
நமக்கு எதுக்கு வம்பு.. இரு அணிக்கும் ஆதரவு.. வித்தியாசமான கெட்டப்பில் வந்த கிறிஸ் கெய்ல்
Published on

18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் பெங்களூரு அணி இதுவரை 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்த போட்டியை காண பல முன்னாள் வீரர்களும், பல்வேறு பிரபலங்களும் அகமதாபாத் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அந்த வகையில் ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் வீரரான கிறிஸ் கெயில் வித்தியாசமான கெட்டப்பில் வந்துள்ளார்.

அதாவது இரு அணிகளுக்கும் தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக பெங்களூரு அணியின் ஜெர்சியையும், தலையில் தலைப்பாகையும் அணிந்து வந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com