ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு எப்போது?: எம்.எஸ்.தோனி விளக்கம்

முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து ஆடிய சென்னை அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு எப்போது?: எம்.எஸ்.தோனி விளக்கம்
Published on

கொல்கத்தா:

ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் கொல்கத்தா, சென்னை அணிகள் மோதின.

முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், வெற்றிக்கு பிறகு சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ்.தோனியிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தோனி, எனக்கு இப்போது 43 வயது ஆகிறது. நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடிவிட்டேன். ஐ.பி.எல். தொடரில் எனது கடைசி ஆண்டு என யாருக்கும் தெரியாது. நான் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். இந்த ஐ.பி.எல். முடிந்த உடன் அடுத்த 8 மாதத்துக்கு எனது உடல் இந்த அழுத்தத்தை தாங்குகிறதா என்பதை பார்க்க வேண்டும். ஓய்வு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. எல்லா இடங்களிலும் கிடைக்கும் ரசிகர்கள் அன்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com