IPL 2025: 200 ரன்களுக்கு மேல் குவித்தால் தோல்வியே இல்லை - தொடரும் மும்பை அணியின் சாதனை

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்த 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது
IPL 2025: 200 ரன்களுக்கு மேல் குவித்தால் தோல்வியே இல்லை - தொடரும் மும்பை அணியின் சாதனை
Published on

ஐ.பி.எல். தொடரின் 29-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

இதன்மூலம் ஐபிஎல்-ல் இதுவரை மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் குவித்த ஒரு போட்டியில் கூட தோற்றதே இல்லை என்ற சாதனையை மும்பை அணி தக்க வைத்துள்ளது.

மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்த 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com