ஐபிஎல் 2018 சீசன் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனை- விஜய் சங்கர் சொல்கிறார்

ஐபிஎல் 2018 சீசன் எனக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். #IPL2018
ஐபிஎல் 2018 சீசன் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனை- விஜய் சங்கர் சொல்கிறார்
Published on

2014 தொடரில் அறிமுகமான விஜய் சங்கர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அதன்பின் கடந்த வருடம் நான்கு போட்டியில் விளையாடினார். தற்போதுதான் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முழுவதும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர்தான் எனக்கு திருப்புமுனை என்று விஜய் சங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து விஜய் சங்கர் கூறுகையில் ‘‘நான் முதல் மூன்று நான்கு போட்டிகளில் போதிய அளவு ரன் அடிக்கவில்லை. இது எனக்கு ஏமாற்றம் அளித்தது. அதன்பிறகு, நான் என்னுடைய போட்டிக்கு தயாராகும் திட்டத்தில் கவனம் செலுத்தினேன். எப்போது பேட்டிங் செய்ய சென்றாலும், பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com