சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த CSK Vs RCB டிக்கெட்டுகள்- கொந்தளித்த ரசிகர்கள்

சென்னை- பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகளை அனைத்தும் தீர்ந்து விட்டது.
சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த CSK Vs RCB டிக்கெட்டுகள்- கொந்தளித்த ரசிகர்கள்
Published on

சென்னை:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணியில் இருந்து ஆன்லைன் மூலம் தொடங்கியது.

www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகளை அனைத்தும் தீர்ந்து விட்டது. ஆன்லைன் முன்பதிவு ஓபன் ஆன சில நொடிகளில் காத்திருப்பு வரிசை 3 லட்சத்தை கடந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

காத்திருப்பு வரிசை 3000 வரை சென்று கடைசி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது என மெசெஜ் ரசிகர்கள் வேதனையடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com