ஐபிஎல் வெறும் பேட்ஸ்மேன்கள் விளையாட்டு அல்ல- சொல்கிறார் நெஹ்ரா

பிரபலமான டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் வெறும் பேட்ஸ்மேன்கள் விளையாட்டு அல்ல என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா கூறியுள்ளார். #IPL2018 #RCB
ஐபிஎல் வெறும் பேட்ஸ்மேன்கள் விளையாட்டு அல்ல- சொல்கிறார் நெஹ்ரா
Published on

டி20 கிரிக்கெட் என்றாலே அது பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியம் என்று கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐபில் கிரிக்கெட் வெறும் பேட்ஸ்மேன்கள் விளையாட்டு அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெஹ்ரா கூறுகையில் ‘‘ஒருபேட்ஸ்மேன் ஒரு போட்டியில் ஐந்து சிக்ஸ் அடிக்கவில்லை என்றாலும் கூட, 40 பந்தில் 120 அல்லது 50 பந்தில் 130 ரன்கள் எடுத்தாலும் அது பெரிதாக காட்டப்படுகிறது. அதேநேரத்தில் பந்து வீச்சாளர்களுக்கான வாய்ப்பும் உள்ளது. நான்கு ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினால், அதுகுறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளுவதில்லை. அதே சமயம் நான்கு ஓவரில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்தால், அது பெரிதாக விமர்சிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com