IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக KKR முன்னாள் வீரர் ஆண்ட்ரே ரசல் அறிவிப்பு

கொல்கத்தா அணிக்காக 12 ஆண்டுகளாக அந்த்ரே ரஸல் விளையாடினார். அந்த்ரே ரஸலை கொல்கத்தா அணி விடுவித்தது பெரும் பேசுபொருளானது.
IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக KKR முன்னாள் வீரர் ஆண்ட்ரே ரசல் அறிவிப்பு
Published on

2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டது.

கொல்கத்தா அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாடிய ஆண்ட்ரே ரசலை அந்த அணி விடுவித்தது பெரும் பேசுபொருளானது.

இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆண்ட்ரே ரசல் அறிவித்துள்ளார்.

2026 சீசனில் கொல்கத்தா அணியின் POWER COACH ஆக செயல்படவுள்ளதாகவும், உலகின் பல்வேறு தொடர்களில் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் ரசல் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com