ரன்கள் குறைவாக அடித்தோம் என சொல்ல மாட்டேன்: சுப்மன் கில்

கேட்ச் தவற விட்டது தோல்விக்கு முக்கிய காரணம்.புதுப்பந்து பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது.
ரன்கள் குறைவாக அடித்தோம் என சொல்ல மாட்டேன்: சுப்மன் கில்
Published on

குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 199 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணி 200 இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சொந்த மைதானத்தில் குஜராத் அணியின் முதல் தோல்வி இது ஆகும். இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:-

இரண்டு கேட்சகளை தவறவிட்டது தோல்விக்கு வழி வகுத்தது என நினைக்கிறேன். நீங்கள் கேட்ச்களை தவற விடும்போது வெற்றி பெறுவது எளிதானதல்ல. பந்து வீச்சாளர்கள் அவர்களது வேலைகளை சிறப்பாக செய்தனர். பந்து பேட்டிற்கு நன்றாக வரும்போது, எதிரணியை கட்டுப்படுத்துவது கடினம். ரன்கள் குறைவானது என்று நான் சொல்ல மாட்டேன்.

புது பந்து பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருந்தது. 200 என்ற இலக்கு நிர்ணயிப்பு போதுமானதுதான். 15 ஓவர் வரை நாங்கள் சரியான வழியில்தான் இருந்தோம். கேட்ச்கள் தவறவிட்டது நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

நீங்கள் பார்த்திராத வீரர்கள் இதுபோல் திடீரென வந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஐபிஎல் போட்டியின் அழகே இதுதான்.

கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வகையில் கடைசி ஓவரில் ஏழு ரன்கள் என்ற நிலை இருந்தபோது தர்ஷன் நல்கண்டே எங்களுக்கு சிறந்த ஆப்சனாக இருந்தார்.

இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com