இரட்டை சதத்தை தவறவிட்ட ஒல்லி போப்: இந்தியாவுக்கு 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்களை குவித்தது.இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்னும், 2வது இன்னிங்சில் 420 ரன்னும் எடுத்தது.
இரட்டை சதத்தை தவறவிட்ட ஒல்லி போப்: இந்தியாவுக்கு 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து
Published on

ஐதராபாத்:

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி 70 ரன்களை குவித்தார்.

தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்களை குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பரத் மற்றும் அக்சர் பட்டேல் பொறுப்பாக விளையாடினர்.

அடுத்து 2வது இன்னிங்சை தொடர்ந்தது இங்கிலாந்து. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஒல்லி போப் நிதானமாக ஆடி சதமடித்தார். 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களை குவித்துள்ளது. போப் 148 ரன்களுடனும், ரெஹான் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் அந்த அணி 126 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதல் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் 400 ரன்களை கடந்தது. இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஒல்லி போப் 196 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 420 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா வெற்றிபெற 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com