3வது டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
3வது டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
Published on

தர்மசாலா:

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது டி போட்டி இமாசலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் இன்று இரவு நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் மார்கிரம் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்து 61 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 18 பந்தில் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மா- சுப்மன் கில் ஜோடி 60 ரன்கள் சேர்த்தது.

அடுத்து இறங்கிய திலக் வர்மா நிதானமாக ஆடினார். சுப்மன் கில் 28 ரன்னில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், இந்திய அணி 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com