துலீப் கோப்பை: இந்தியா பி-இந்தியா சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா

இந்தியா பி முதல் இன்னிங்சில் 332 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 157 ரன்கள் குவித்தார்.
துலீப் கோப்பை: இந்தியா பி-இந்தியா சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா
Published on

அனந்தபூர்:

துலீப் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நேற்று நிறைவடைந்தன.

கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா டி அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா பி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா சி 525 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 111 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி 332 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 157 ரன்கள் குவித்தார்.

இந்தியா சி அணி சார்பில் அன்ஷுல் கம்போஜ் 8 விக்கெட் வீழ்த்தினார்.

193 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது இந்தியா சி அணி. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 128 ரன்கள் எடுத்தது. ருத்ராஜ் அரை சதமடித்தார். இதனால் இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகன் விருது இந்தியா சி அணியின் அன்ஷுல் கம்போஜ்க்கு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com