இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் லோகோ வெளியீடு

இந்திய அணியை வழிநடத்துவதில் கேப்டன் ரோகித் சர்மா உற்சாகமாக உள்ளார்.இந்தியாவின் வரலாற்று வெற்றியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் லோகோ வெளியீடு
Published on

இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆடவருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான லோகோவை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

2011ம் ஆண்டு இதே நாளில் டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றது. உலகக் கோபபையை 12 ஆண்டு ஆனதை கொண்டாடும் வகையில் ஐசிசி இன்று லோகோவை வெளியிட்டிருக்கிறது.

லோகோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவதில் கேப்டன் ரோகித் சர்மா உற்சாகமாக உள்ளார். கிரிக்கெட்டில் தொடர்புடைய அனைவருக்கும் இந்த உலக கோப்பை சிறப்பு வாய்ந்த போட்டி என கூறிய ரோகித், கோப்பையை வெல்வதற்கு அடுத்த சில மாதங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளதாக கூறினார்.

2011-ல் கோப்பை வென்ற இந்தியாவின் வரலாற்று வெற்றியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நினைவு கூர்ந்துள்ளார். அத்துடன், 2023ல் நடக்கும் உலக கோப்பை தொடரை நடத்துவதை பிசிசிஐ ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com