ஹாரி புரூக் அபார சதம்: 3வது ஒருநாள் போட்டியில் டிஎல்எஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 304 ரன்கள் எடுத்தது.அடுத்து ஆடிய இங்கிலாந்து மழை பெய்ததால் டிஎல்எஸ் முறையில் வெற்றி பெற்றது.
ஹாரி புரூக் அபார சதம்: 3வது ஒருநாள் போட்டியில் டிஎல்எஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி
Published on

லண்டன்:

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி செஸ்டர் லீ-ஸ்டிரீட்டில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. அலெக்ஸ் கேரி 77 ரன்னும், ஸ்டீவ் சுமித் 60 ரன்னும், ஆரோன் ஹார்டி 44 ரன்னும், கேமரூன் கிரீன் 42 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் டக் அவுட்டானார். பென் டக்கெட் 8 ரன்னில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு இணைந்த வில் ஜாக்ஸ், ஹாரி புரூக் ஜோடி பொறுப்புடன் ஆடி 156 ரன்களை சேர்த்தது. வில் ஜாக்ஸ் அரை சதம் கடந்து 84 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஹாரி புருக் சிறப்பாக ஆடி சதம் கடந்தார்.

இறுதியில், இங்கிலாந்து அணி 37.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டிஎல்எஸ் முறை பின்பற்றப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூல ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1-2 என பின்தங்கி உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com