உன்னைபோல் ஒரு ரசிகனே எனக்கு தேவை இல்லை: சேவாக் உடனான கசப்பான நினைவுகளை பகிர்ந்த மேக்ஸ்வெல்

2017 ஐபிஎல் சீசனில் சேவாக் பஞ்சாப் அணியில் அதிக ஆதிக்கம் செலுத்தினார். எனக்குள் இருந்த உங்களின் ரசிகன் மிகவும் காயமடைந்ததாக கூறினேன்.
உன்னைபோல் ஒரு ரசிகனே எனக்கு தேவை இல்லை: சேவாக் உடனான கசப்பான நினைவுகளை பகிர்ந்த மேக்ஸ்வெல்
Published on

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான மெகா வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் அல்லது ஆர்டிஎம் விதிமுறையை பயன்படுத்தி ஏலத்தில் வாங்க முடியும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் தக்க வைத்துள்ள வீரர்கள் விவரங்களை ஒவ்வொரு அணியும் வெளியிட்டு வந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க ஐபிஎல் சீசனில் நடந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் கூறி வருகிறார்.

அந்த வகையில் பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல் இருக்கும் போது சேவாக் உடனான கசப்பான நினைவுகளை மேக்ஸ்வெல் பகிர்ந்துள்ளார்.

அதில், 2017 ஐபிஎல் சீசனில் சேவாக் பஞ்சாப் அணியில் அதிக ஆதிக்கம் செலுத்தினார். பிளே ஆப்-க்கு செல்லவில்லை என்றாலும் எனது தலைமையில் சிறப்பாக செயல்பட்டதாகவேதே நினைத்தேன். கடைசி போட்டியின்போது அந்த அணியின் கேப்டனாக நான் செய்தியாளர்களை சந்திக்க சென்றேன்.

ஆனால் எனக்கு பதில் சேவாக் செய்தியாளர்களை சந்தித்தது மட்டுமன்றி, நான் அவருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறினார். பின்னா வாட்ஸ்அப் குழுவில் இருந்தும் என்னை நீக்கினார். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குள் இருந்த உங்களின் ரசிகன் மிகவும் காயமடைந்ததாக கூறினேன். அதற்கு அவர் "உன்னைபோல் ஒரு ரசிகனே எனக்கு தேவை இல்லை" என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com