இந்திய வீரர் திலக் வர்மாவுக்கு தெலங்கானா முதலமைச்சர் ரெவந்த் ரெட்டி பாராட்டு

திலக் வர்மாவுக்கு ஒரு பேட்டை முதலமைச்சர் பரிசாக வழங்கினார்.வெகுமதியாக ரூ.10 லட்சமும் திலக் வர்மாவுக்கு வழங்கப்பட்டது.
இந்திய வீரர் திலக் வர்மாவுக்கு தெலங்கானா முதலமைச்சர் ரெவந்த் ரெட்டி பாராட்டு
Published on

ஆசிய கோப்பை தொடர் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்திய தடுமாறிய நிலையில் ஒற்றை ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஆசிய கோப்பையில் கலக்கிய ஐதராபாத்தை சேர்ந்த திலக் வர்மாவுக்கு அம்மாநில முதலமைச்சர் ரெவந்த் ரெட்டி நேரில் அழைத்து பாராட்டினார். அதனை தொடர்ந்து அவருக்கு ஒரு பேட்டை பரிசாகவும் வழங்கினார். வெகுமதியாக ரூ.10 லட்சமும் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com