அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: மந்தனா தலைமையில் இந்திய மகளிர் அணி அறிவிப்பு

இந்திய அணியின் கேப்டனாக மந்தனா, துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளனர். கேப்டனாக செயல்பட்ட கவுருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: மந்தனா தலைமையில் இந்திய மகளிர் அணி அறிவிப்பு
Published on

அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதன் முதல் போட்டி வருகிற 10-ந் தேதி ராஜ்கோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக மந்தனா, துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த கவுருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரேனுகா சிங் தாகூருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ரிச்சா கோஷ் மற்றும் உமா செத்ரி விக்கெட் கீப்பர்களாக இடம் பெற்றுள்ளனர்.

அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:-

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி சர்மா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா செத்ரி, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், ரக்வி பிஸ்ட், மின்னு மணி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், டைட்டாஸ் சாது , சைமா தாகூர், சயாலி சத்கரே.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com