

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது. இதில் 4 போட்டிகள் முடிவில் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 309 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து விளையாடி ஆஸ்திரேலியா அணி டக்வொர்த் லீவிஸ் முறைபடி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் வென்றது.
மேலும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி ஒரு போட்டியில் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் உபயோகித்துள்ளனர். அதமட்டுமல்லாமல் சுழற்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சேர்ந்து 194 பந்துகளை வீசி சாதனை படைத்துள்ளனர்.