U19 ஆசிய கோப்பை தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்

U19 ஆசிய கோப்பை தொடர் வருகிற டிசம்பர் 12-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது.இந்த தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணி டிசம்பர் 14-ந் தேதி மோதுகிறது.
U19 ஆசிய கோப்பை தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்
Published on

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் இணைந்து 2025-ம் ஆண்டுக்கான U19 ஆசிய கோப்பையை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதாக அறிவித்துள்ளன.

U19 ஆசிய கோப்பை தொடர் வருகிற டிசம்பர் 12-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணி டிசம்பர் 14-ந் தேதி மோதுகிறது.

8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 3 அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக CSK வீரர் ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அணியில் வைபவ் சூரியவம்சியும் இடம் பெற்றுள்ளார்.

இந்திய அணி:-

ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு (கீப்பர்), ஹர்வன்ஷ் சிங், யுவராஜ் கோஹில், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ. படேல், நமன் புஷ்பக், டி. தீபேஷ், ஹெனில் மோகன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com