அதிரடியில் மிரட்டிய கோலி, ராகுல்... 213 ரன்கள் இலக்கை துரத்தும் ஆப்கானிஸ்தான்

கே.எல்.ராகுல், விராட் கோலி இருவரும் இணைந்து விரைவில் 100 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது
விராட் கோலி, கே.எல்.ராகுல்
விராட் கோலி, கே.எல்.ராகுல்
Published on

துபாய்:

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இன்று தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

சூப்பர்-4 சுற்றில் அடுத்தடுத்து தோல்வி அடைந்து இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்த இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் முழு பலத்தையும் வெளிப்படுத்தியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், விராட் கோலி இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இவர்கள் இருவரும் இணைந்து விரைவில் 100 ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 119 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. கே.எல்.ராகுல் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட முற்பட்டு 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய விராட் கோலி சதம் கடந்தார். 53 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அவர் இந்த இலக்கை எட்டினார். தொடர்ந்து ஆடிய அவர் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் சேர்க்க,  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பரீத் அகமது 2 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com