2வது போட்டியிலும் வெற்றி: வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.அடுத்து ஆடிய வங்கதேசம் அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
2வது போட்டியிலும் வெற்றி: வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்
Published on

அபுதாபி:

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இப்ராகிம் ஜட்ரன் சிறப்பாக ஆடி 95 ரன்கள் எடுத்தார்.

வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 3 விக்கெட்டும், தன்ஜிம் ஹசன், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் வீரர்களின் துல்லிய பந்து வீச்சில் வங்கதேச வீரர்கள் சிக்கினர்.

இறுதியில், வங்கதேசம் அணி 28.3 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 81 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் 2-0 என கைப்பற்றியது.

ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஏற்கனவே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆப்கானிஸ்தான் 0-3 என இழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com