டெஸ்ட் அணிக்கு தனி பயிற்சியாளர் நியமிக்க வேண்டுமா: ஐ.பி.எல். அணியின் உரிமையாளருக்கு கம்பீர் பதிலடி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் தேவை என்று ஐ.பி.எல். அணியின் உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார். ஒவ்வொருவரும் தங்களது வரம்புக்குள் இருப்பது முக்கியம்.
டெஸ்ட் அணிக்கு தனி பயிற்சியாளர் நியமிக்க வேண்டுமா: ஐ.பி.எல். அணியின் உரிமையாளருக்கு கம்பீர் பதிலடி
Published on

விசாகப்பட்டினம்:

விசாகப்பட்டினத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 271 ரன் இலக்கை இந்திய அணி 39.5 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் சதமும் (116 ரன்), ரோகித் சர்மா (75 ரன்), விராட் கோலி (65 ரன்) அரைசதமும் விளாசினர். வெற்றியின் மூலம் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.

இதனையடுத்து இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் கட்டாக்கில் நாளை நடக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிரிக்கெட்டுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் சில விஷயங்களை பற்றி சொன்னார்கள். ஐ.பி.எல். அணியின் உரிமையாளர் ஒருவர் (டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜின்டால்) இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் தேவை என்று கூறியுள்ளார். கிரிக்கெட்டுக்கு சம்பந்தமே இல்லாத நபர் இவ்வாறு சொன்னது ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களது வரம்புக்குள் இருப்பது முக்கியம். நாங்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவது கிடையாது. எனவே, நாங்கள் என்ன செய்தாலும் அதில் தலையிட அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

இவ்வாறு கம்பீர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com