தாய்லாந்தை 37 ரன்னில் சுருட்டியது இந்திய பெண்கள் அணி

இந்திய தரப்பில் சினே ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.தாய்லாந்து அணியில் ஒரு வீராங்கனை மட்டுமே இரட்டை இலக்க ரன்னை எடுத்தார்.
தாய்லாந்தை 37 ரன்னில் சுருட்டியது இந்திய பெண்கள் அணி
Published on

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தாய்லாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு வீராங்கனையை தவிர மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். இதில் 4 வீராங்கனைகள் ரன் ஏதும் எடுக்கவில்லை. இந்திய தரப்பில் சினே ராணா 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா ராஜேஸ்வரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இறுதியில் 15.1 ஓவரை மட்டுமே சந்தித்த தாய்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37 ரன்கள் எடுத்தது. இதனால் 38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com