2வது டி20 போட்டி- தென் ஆப்பிரிக்காவுக்கு 238 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது இந்தியா

அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 57 ரன் அடித்தார்.
 சூரியகுமார் யாதவ்
 சூரியகுமார் யாதவ்
Published on

கவுகாத்தி:

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் கே.என்.ராகுல் 28 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோகித் சர்மா 43 ரன் அடித்தார். அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளும் அடங்கும்.

அவருடன் ஜோடி சேர்ந்த விராத் கோலி 49 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 17 ரன் அடித்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்தது. இதையடுத்து 238 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com