

பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்தியா, இந்தோனேசியா அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் பஜன் கவுர் கலந்துகொண்டார்.
இதில் பஜன் கவுர் 5-5 என சமனிலை பெற்றார். இதனால் ஷூட் ஆப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பஜன் கவுர் தோல்வி அடைந்தார்.
மற்றொரு வீராங்கனையான தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.