

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, ஹாங்காங்கின் லீ சீக் யூ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஹாங்காங் வீரர் 16-21, 21-13, 21-14 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் ஆயுஷ் செட்டி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.