

கிஷ்கிந்தை என்ற வனப்பகுதியில் வாழ்ந்த குரங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள் ‘வானரர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.
இவர்களின் அரசனாக வாலி என்பவர் இருந்தான். தவிர சுக்ரீவன், அனுமன் ஆகியோரும் வானர இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே புராணங்கள் அனைத்தும் எடுத்துரைக்கின்றன.
இலங்கையின் அரசனான ராவணன், ராமனின் மனைவி சீதையை கடத்திச் சென்று விட்டான். அவனிடம் இருந்து சீதையை மீட்பதற்காக, ராமனுக்கு உதவிய பெரும் பங்கு இந்த வானரப் படைகளுக்கே உண்டு. அவர்கள் ராவணப் படைகளுடன், ராமனுடன் சேர்ந்து போரிட்டு வெற்றியைப் பெற்றனர்.