வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
Published on

வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் புத்தாண்டு வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நேற்று புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு பேராலயத்தின் விடியற்காலை விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.

தொடர்ந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டது. இதில் பேராலய அதிபர் பிரபாகர், துணை அதிபர் சூசைமாணிக்கம் பொறுப்பாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புத்தாண்டு திருப்பலியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். புத்தாண்டு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையையொட்டி வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வேளாங்கண்ணிக்கு வந்த பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com