உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 6-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடக்கிறது.
உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது
Published on

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 6-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்து வருகிறது. இரவில் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

நாளை காலை 9 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருள்கிறார். காலை 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. தேர் கோவில் வீதியை சுற்றி நிலையை வந்தடையும். நாளை தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு என்பதால் தேரோட்ட நிகழ்வில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com