ஆரத்தி எடுப்பது வெறும் திருஷ்டிக்காக தானா? பின்னணியில் அறிவியல் இருக்கிறதா?

காலம், காலமாக ஆரத்தி எடுப்பதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்கான சடங்காக பார்த்து வரும் நாம் அதன் பின்னணியில் பெரிய அறிவியல் காரணம் ஒன்று இருக்கிறது என்பதனை பார்க்காமல் விட்டுவிட்டோம்.
ஆரத்தி எடுப்பது வெறும் திருஷ்டிக்காக தானா?
ஆரத்தி எடுப்பது வெறும் திருஷ்டிக்காக தானா?
Published on

காலம், காலமாக ஆரத்தி எடுப்பதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்கான சடங்காக பார்த்து வரும் நாம் அதன் பின்னணியில் பெரிய அறிவியல் காரணம் ஒன்று இருக்கிறது என்பதனை பார்க்காமல் விட்டுவிட்டோம்.

திருமணம் முடிந்த தம்பதியர், பிரசவம் முடிந்த பெண், வெளியூர் பயணம் முடித்து வரும் நபர்கள் என பல சுப நிகழ்ச்சிகளுக்கே ஆரத்தி எடுப்போம். மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அறிந்தது தான்.

சுண்ணாம்புக்கும் இந்த திறன் உண்டு. பிரசவித்த பெண், மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் நபர்கள், பயணம் செய்து வருபவர்கள் மீது கண்டிப்பாக கிருமிகள் அதிகம் அண்டியிருக்கும்.

இந்த கிருமிநாசினி நீரில் சூடமேற்றி உடலை சுற்றுவதால், உடல் மேல் அண்டியிருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். இது வீட்டினுள் உள்ளவர்களை அண்டாமல் இருக்க வாசலிலேயே ஆரத்தி எடுத்துவிடுகிறோம். 

X

Maalai Malar
www.maalaimalar.com