புனித வளனார் பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி

திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் புத்தாண்டையொட்டி திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நேற்று இரவு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
புனித வளனார் பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி
புனித வளனார் பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி
Published on

திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் புத்தாண்டையொட்டி திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நேற்று இரவு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது. ஆயரின் செயலர் ஆபேல், பேராலய பங்குத்தந்தைகள் சகாயராஜ், ஜெபசீலன் பிரபு, ஜெபராஜ் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர். 

இரவு 10.30 மணிக்கு திருப்பலி தொடங்கியது. இதில் நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் நடைபெற்று, 12 மணி அளவில் உன்னதங்களிலே பாடல் பாடப்பட்டு புத்தாண்டு நிகழ்வுகள் நடந்தன. அதன்பிறகு ஆயர் மறையுரை ஆற்றினார். அதேபோல் திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் புத்தாண்டு ஆராதனை தலைமை போதகர் டேவிட்சன் பால்ஜேக்கப் தலைமையில் நடந்தது. 

அதேபோன்று திண்டுக்கல் டி.இ.எல்.சி திருத்துவநாதர் ஆலயத்தில் தலைமை போதகர் காருண்யா தலைமையில் ஆண்டுஇறுதி நன்றி ஆராதனை மற்றும் புத்தாண்டு ஆராதனை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com