சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் இன்று தொடங்குகிறது

ஆடி மாதத்தையொட்டி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கற்கடக ஸ்ரீபலி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந் தேதி வரை நடக்கிறது..
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் இன்று தொடங்குகிறது
Published on

பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தையொட்டி சிறப்பு பூஜையாக கற்கடக ஸ்ரீபலி விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான கற்கடக ஸ்ரீபலி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந் தேதி வரை நடக்கிறது..

இன்று முதல் ஆடி மாதம் முழுவதும் காலையில் தாணுமாலயசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ருத்ர ஜெபத்துடன் மகாதாரை அஷ்டாபிஷேகம், நண்பகல் 11 மணிக்கு தீபாராதனை போன்றவை நடைபெறுகிறது.

இதைப்போன்று இன்று முதல் 29-ந் தேதி வரை ஆடிமாத களபாபிஷேகம் நடைபெறுகிறது. களப அபிஷேகத்தையொட்டி விஷ்ணுவுக்கும், தாணுமாலயசாமிக்கும் தினந்தோறும் நடைபெறும் நித்யகாரிய பூஜைகளுக்கு பின்பு தங்கக் குடத்தில் சந்தனம், களபம் மற்றும் நறுமணப்பொருட்கள் அடங்கிய களப அபிஷேகம் நடைபெறுகிறது.

29-ந் தேதி உதய அஸ்தமன பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com