செவ்வாய்க்கிழமை விரதமிருந்து நெய் தீபம் ஏற்றுங்கள்

மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் சிங்கிரிக்குடி தலத்தில் விரதமிருந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
செவ்வாய்க்கிழமை விரதமிருந்து நெய் தீபம் ஏற்றுங்கள்
Published on

மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் சிங்கிரிக்குடி தலத்தில் விரதமிருந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க் கிழமைகளில் விரதமிருந்து நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள். பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள் பாலிக்கிறார்.

இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்ததைக் குறிக்கும் வகையில், மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது.

இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கும் நெல்லை மாவட்டம் கீழபாவூரிலும் மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள். மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் தலம் இது. உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com