துன்பம் போக்கும் சக்தி மந்திரம்

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சக்தி தேவிக்கு உகந்த இந்த மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் துன்பம் நீங்கும். வறுமை ஒழியும்.
துன்பம் போக்கும் சக்தி மந்திரம்
Published on

அந்தரி சுந்தரி அதிபயங்கரி சக்தி

மந்தாகினி வாலைக்குமரி மஹாசக்தி

நிரந்தரி நீலி கால பைரவி

திரிசூலி தேவி மஹிஷாசுர மர்த்தினி

சரணம் சரணம் சரணம் தேவி

எனைக் காத்தருள்வாய மஹாசக்தி

இம்மந்திரம் ஐந்து முறை படிக்க வேண்டும்! அதன் பின்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் படிக்க வேண்டும்!

காரணமும் தனுவு  நினைக்கெனத் தந்தேன்

காளி நீ காத்தருள் செய்யே!

மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன்;

மாரவெம் பேசயினை அஞ்சேன்;

இரணமும் சுகமும் பழியு நற்புகழும்

யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்!

சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்!

தாயெனைக் காத்தருள் கடனே!

தவத்தினை எளிதாப் புரிந்தனள்; யோகத்

தனி நிலை ஒளியெனப் புரிந்தாள்;

சிவத்தினை எளிதாப் புரிந்தனள்; மூட்ச்

சித்தமும் தெளிவுறச் செய்தாள்;

பவத்தினை வெறுப்ப அருளினாள்; நாளும்

பான்மைகொ ளவள்மயம் புரிந்தாள்;

அவத்தினைக் களைந்தாள்; அறிவென விளைந்தாள்;

அருந்தவமா வாழ்கவிங் கவளே!

ஓம்  ஓம்  ஓம்!

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com