காணிப்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக மங்கல சீர் வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்
Published on

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக பட்டு வஸ்திரங்கள், மங்கல சீர் வரிசை பொருட்கள் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பட்டு வஸ்திரம் மற்றும் சீர்வரிசை பொருட்களை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியும், அவரின் மனைவியும் சமர்ப்பித்தனர்.

முன்னதாக காணிப்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு வந்த அவர்களை, ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி நாராயணசாமி, பூதலப்பட்டு தொகுதி எம்.எஸ். பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்றனர். கோவில் அர்ச்சகர்கள், செயல் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டிக்கு பாரம்பரிய சம்பிரதாயத்தின் படி பரிவட்டம் கட்டி, பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்களை தலையில் வைத்தனர். அவரும், மனைவியும் மற்ற அதிகாரிகளும் ஊர்வலமாக வந்து விநாயகரிடம் சமர்ப்பணம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com