சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் விநாயகர் தேர் வெள்ளோட்டம்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் விநாயகர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் விநாயகர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்த போது எடுத்த படம்.
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் விநாயகர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்த போது எடுத்த படம்.
Published on

ஆடித்தவசு திருவிழா, சித்திரை திருவிழா, திருவாதிரை திருவிழா ஆகிய திருவிழாக்களில் காலை 5 மணிக்கு விநாயகர் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் விநாயகர் தேர் கடந்த 25 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து இருந்தது.

இதனால் விநாயகர் தேர் கடந்த 25 ஆண்டுகளாக ஓடவில்லை. மேலும் விநாயகர் தேரோட்டம் ஒவ்வொரு திருவிழாக்களிலும் நடைபெற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com