ரேணுகாதேவி அம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்

காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ரேணுகாதேவி அம்மன் கோவிலில் ஏராளமான கிராம மக்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.
ரேணுகாதேவி அம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்
ரேணுகாதேவி அம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்
Published on

காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ரேணுகாதேவி அம்மன் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு மார்கழி மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நாளையொட்டி ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அம்மனுக்கு வருடாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான வருடாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவில் ஏராளமான கிராம மக்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

அதனைதொடர்ந்து பால் மற்றும் மங்கல பொருட்களால் ரேணுகாதேவி அம்மனுக்கு அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com