புனித உபகார அன்னை திருவிழா இன்று தொடங்குகிறது

நெல்லை மாவட்டம் காவல்கிணறு ஏசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
புனித உபகார அன்னை திருவிழா இன்று தொடங்குகிறது
Published on

நெல்லை மாவட்டம் காவல்கிணறு ஏசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்ற நிகழ்ச்சி தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன் அடிகள் தலைமையில் நடக்கிறது. விழா 10 நாட்கள் நடக்கிறது.

விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு மறையுரை, நற்கருணை ஆசீரும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஒவ்வொரு திருநாளிலும் காலை திருப்பலி ஒவ்வொரு மண்டலம் சார்பில், சிறப்பிக்கப்படுகிறது.

தொடர்ந்து 8-ம் திருநாளான வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு புதுநன்மை திருப்பலி நடக்கிறது. மாலை 7 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 9-ம் திருநாளான 23-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது.

10-ம் திருநாளான 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் பெருவிழா ஆடம்பர பாடல் திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கப்படுகிறது. மதியம் 3 மணிக்கு தேர்பவனியும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்குகுரு மைக்கிள் மகிழன் அடிகள், பங்கு மேய்ப்பு பணிக்குழு அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com