தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது
Published on

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் காற்றாடி மலையில் தூய வியாகுல அன்னை ஆலயம், மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை ஆலயம் என இரட்டை திருத்தலம் உள்ளது. இதில் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

8-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, சிலுவை பாதை, காலை 11 மணிக்கு மறைசாட்சி நவநாள் சிறப்பு திருப்பலி, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார்.

தினமும் காலையும், மாலையும் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை ஆகியவை நடைபெறுகிறது. 10-ந்தேதி காலை முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு குருக்கள் நல வாரிய இயக்குனர் அல்போன்ஸ் தலைமை தாங்க, மறை மாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். 14-ந்தேதி காலை 11 மணிக்கு மலைவலம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருப்பலிகள் நடைபெறுகிறது. அருட்பணியாளர்கள் அருள்ராஜ், ராஜ், பெஸ்கி, கென்சன், மில்டன், மேக்ஸ்மியன் ஆகியோர் நிறைவேற்றுகிறார்கள்.

15-ந்தேதி காலை 6.45 மணிக்கு சிலுவை பாதை நடக்கிறது. 11 மணிக்கு மறைசாட்சி நவநாள் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோவளம் பங்குத்தந்தை பிரபுதாஸ் தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார்.

மாலை திருப்பலிக்கு மறைமாவட்ட நிதி காப்பாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமை தாங்க, பங்குபணியாளர் சஜு மறையுரையாற்றுகிறார். இரவு 8.15 மணிக்கு நற்கருணை பவனி, அதைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடக்கிறது.

16-ந்தேதி இரவு 7.15 மணிக்கு மாலை ஆராதனைக்கு மறைமாவட்ட முதன்மை செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஜான்சன் மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது.

17-ந்தேதி காலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார். அதன்பிறகு நடைபெறும் திருப்பலிகளை அருட்பணியாளர்கள் சுனில்குமார், ஜேசுதாசன், அன்றனி, செல்வராஜ், சைமன், மைக்கிள்ராஜ், சகாய ஆனந்த் ஆகியோர் நிறைவேற்றுகிறார்கள். மாலை 3.30 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது. இரவு 10.30 மணிக்கு தேவா கலை குழுவின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாற்று நாடகம் நடக்கிறது.

திருவிழாவுக்கான ஏற்பாட்டை பங்கு தந்தைகள் ஸ்டீபன், ஞானசேகரன், திருத்தொண்டர் சகாய சுனில், பங்குப்பேரவை துணைத்தலைவர் பயஸ்ராய், அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com