

பின்னர் கோவில் வளாகத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சனீஸ்வரபகவானுக்கும்- நீலாந்தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.
மேலும் நேற்று வரலட்சுமி நோன்பு தினத்தில், திருக்கல்யாணம் நடைபெற்றதை அடுத்து பெண்களுக்கு திருமாங்கல்யம் மற்றும் வளையல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.