திரவுபதியின் மானம் காத்த கண்ணபிரான்

பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதை என்பதை உணர்த்த திரவுபதிக்கு கண்ணன் உதவிய கதையை பார்க்கலாம்.
திரவுபதியின் மானம் காத்த கண்ணபிரான்
Published on

பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றதால் துரியோதனன், திரவுபதியை துகிலுறியுமாறு துச்சாதனிடம் சொன்னான். அந்த துஷ்டனும் சிறிதும் இரக்கமில்லாமல் திரவுபதியின் புடவை தலைப்பை இழுத்து இழுக்கத் தொடங்கினான்.

சபையில் இருந்தவர்கள் எல்லாம் செயலற்று, வாய்மூடி ஊமைகளாயினர். திரவுபதி இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, ‘ஹரி ஹரி கிருஷ்ணா, அபயம்! அபயம்! நீதான் எனக்கு துணை’ என ஓலமிட்டாள்.

அந்த அனாதரட்சகன் உடனே கருணை புரிய, திரவுபதியின் புடவை வளர்ந்து கொண்டே போனது. துச்சாதனன் அதைப்பற்றி இழுத்து இழுத்து போட்ட புடவை மலைபோல் கிடக்க அவன் கை ஓய்ந்து, கீழே சாய்ந்தான். பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com