பிரம்மோற்சவ விழா 11-வதுநாள்: அதிகார நந்தி வாகனத்தில் விநாயகர் உலா

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 11-வது நாளில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதிகார நந்தி வாகனத்தில் விநாயகர் உலா
அதிகார நந்தி வாகனத்தில் விநாயகர் உலா
Published on

சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று காலை விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து இரவு அதிகார நந்தி வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில் பங்கேற்ற பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தாசினம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழாவின் 12-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) ராவண பிரம்மா வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com