காமாட்சி அம்மனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

காமாட்சி அன்னையே, உன் அருளால் மஞள் சரடும் அணிந்துகொண்டேன். என் கணவரைக் காத்தருளும் தெய்வம் நீயம்மா…. என்றும் காத்தருள்வாய் அன்னையே என்று இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
காமாட்சி அம்மன்
காமாட்சி அம்மன்
Published on

சந்த்ராசந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலா பாங்கலீலாம்

குந்தஸ்மேராம் குசபரநதாம் குந்தளோத்தூத ப்ருங்காம்

மாராராதே: மதனஸிகினம் மாக்ஸளம் தீபயந்தீம்

காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லி முபாஸே..

விளக்கம்:

சந்திரனை தலையின் ஆபரணமாக அணிந்துகொண்டிருப்பவளே.. அழகிய திருமுகம் கொண்டவளே… சஞ்சலமிக்கவர்களின் மனவேதனையைப் போக்குபவளே. குந்த புஷ்பம் போன்ற அழகை கொண்டிருப்பவளே… ஸ்தன பாரத்தினால் வணங்கிய சரீரத்தை உடையவளே.. மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளே..காமாட்சி தாயே…உன்னை வணங்குகிறேன்.

பூஜை முடித்து  நோன்பு கயிறு கழுத்தில் கட்டும் போது உருகாத வெண்ணெயும், ஓரடையும் வைத்து நான் நோன்பு இருந்தேன். ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும் என்று வேண்டி கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

தோரம் க்ரஹணாமி ஸூபகே

ஸஹாரித்ரம் தராம்யஹம்

பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்

சுப்ரீதா பவ ஸர்வதா:

என்ற ஸ்லோகத்தை சொல்லி கட்டிக்கொள்ள வேண்டும்.

விளக்கம்:

என்னுடைய கணவர் நீண்ட காலம் நோய்நொடியில்லாமல் வாழ்வதற்காக, இந்த நோன்பு விரத்ததை மேற்கொள்கிறேன். காமாட்சி அன்னையே, உன் அருளால் மஞள் சரடும் அணிந்துகொண்டேன். என் கணவரைக் காத்தருளும் தெய்வம் நீயம்மா…. என்றும் காத்தருள்வாய் அன்னையே !

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com